ஆந்திராவில் வாகன சோதனையில் ஈடுபட்ட செம்மரக்கடத்தல் தடுப்பு போலீஸில் ஒருவர் மீது கார் ஏற்றிக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கடத்தல்காரர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவில் செம்மரக்கடத்தல் அதிரடி போலீசார் வழக்கம்போல நேற்று இரவு ரோந்துக்குச் சென்றனர். அன்னமய மாவட்டம் கே.வி.பள்ளி மண்டலம் குன்றேவாரி பள்ளி சந்திப்பு அருகே வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த பேலீசார் முயன்றனர்.
ஆனால் அந்த கார் நிற்காமல் போலீஸ் ஒருவர் மீது ஏறிச் சென்றது. இதில் சிறப்பு அதிரடி காவலர் பி.கணேஷ் (30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காவலர் மீது காரை ஏற்றிய கடத்தல்காரர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை விடாமல் துரத்திச் சென்று காரை பிடித்தனர்.
அப்போது 3 பேர் தப்பியோடிய நிலையில் 2 பேர் கை செய்யப்பட்டனர். காரில் இருந்து 7 செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.